Thursday, January 20, 2011

என் இனிய தமிழ்மக்களே...




பாரதிராஜா என்ற கலைஞனுக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழ் திரையுலகில் ஒரு புதிய பாணியை ஏற்படுத்தியவர். நம் கிராமங்கள், அங்கு வாழும் மக்கள், அவர்தம் சுகம், துக்கம், வீரம், காதல்... என கிராமிய வாழ்க்கையை வெகு யதார்த்தமாக திரையில் பிரதிபலித்தவர் இந்த இயக்குனர் இமயம்.

சினிமாவிற்கு அப்பால் தமிழையும், தமிழ் மண்ணையும் மிகவும் நேசிப்பவர். 'தமிழன் தலைநிமிர்ந்து வாழவேண்டும்' என்ற கொள்கையில் உறுதியான நம்பிக்கை உள்ளவர்.

சரி விஷயத்திற்கு வருவோம்...

சமீபத்திய ஆனந்த விகடனில் அவரின் காரசாரமான பேட்டி ஓன்று வெளியாகியுள்ளது. சினிமா, அரசியல், ஈழம் என அனைத்திற்க்கும் சரவெடி போன்ற பதில்கள். தமிழ்நாட்டில் தமிழனுக்கு 'வேல்யூ' இல்லை என்று ஆதங்கபட்டுள்ளார்.

பேட்டியின் சில துளிகள்:

'இங்கே எங்கேய்யா இருக்கான் தமிழன்? There is no Tamilan in Tamilnad'

'I love my people. I love my soil. I love my language'

ஆரம்பம்முதலே அவரின் அனைத்து பேட்டிகளிலும், பேச்சுக்களிலும் ஆங்கில நெடி சற்று தூக்கலாகதான் இருக்கும்.

வேற்று மொழி வார்தைகள் கலக்காமல் ஓரு மொழியை தற்போதைய சூழலில் பேசமுடியாது என்பதை ஓப்புக்கொள்கிறேன்.

தமிழையும், தமிழ் பேசும் மக்களையும் பெரிதும் நேசிப்பவர் பேட்டியில் ஏன் இப்படி ஒர் ஆங்கிலக் கலவை, என்பதுதான் என் தீராத சந்தேகம் :)

ANYWAY...LONG LIVE TAMIL.....


No comments:

Post a Comment