Wednesday, February 9, 2011

ஜோதிடமும் அறிவியலும்

ஜோதிடம் என்பது அறிவியலா?

உலகமெங்கும் உள்ள அறிஞர்கள் மத்தியில் காலம்காலமாக அலசப்பட்டு வரும் ஓர் சர்ச்சை இது. பல உலக விஞ்ஞானிகள் - இந்திய விஞ்ஞானிகள் உட்பட- ஜோதிடம் அறிவியல் அல்ல என்கின்றனர்.

ஆனால், நமக்கு ஜோதிடம் என்பது அறிவியல்தான்!

இதனை, சில தினங்களுக்கு முன் மும்பை உயர்நீதிமன்றம் ஓர் வழக்கில் ஊர்ஜிதபடுத்தியுள்ளது. இதற்கு அடிப்படையாக சில ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளது.

ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்பது பிரச்சனையல்ல. இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் காலம்காலமாக சமூகத்தில் ஊறிபோன நம்பிக்கைகள், குறிப்பாக மதரீதியான நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டு முடிவெடுப்பது சரியா?

சரியல்ல... கண்டிக்கதக்கதும்கூட என்பதுதான் என் தாழ்மையான கருத்து.

ஆனால், சமீபத்தில் தேசிய அளவில் கவனிக்கபட்ட வழக்குகளில் எல்லாம் - அயோத்தி பிரச்சனை, சேதுகால்வாய் திட்டம் - இதுதான் நிலைமை!

ஒன்று, இந்த கேள்வி நீதிமன்றத்தின் ஆட்சி எல்லைக்குள் (jurisdiction) இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்திருக்கலாம். அல்லது, நிபுணர் குழு ஒன்றினை அமைத்து அதன் கருத்தினை கேட்டிருக்கலாம்.

சரி, ஜோதிடம் அறிவியலா?

இதற்கு விடை காண்பதற்கு, முதலில் அறிவியல் என்றால் என்ன என்றும், அந்த விளக்கத்தில் ஜோதிடம் பொருந்துகிறதா என்றும் பார்ப்போம்.

அறிவியல் என்பதற்கு பல விளக்கங்கள் உள்ளன.

தத்துவமேதை அரிஸடாடில் தரும் எளிமையான விளக்கம்:
"அறிவியல் அறிவு என்பது தர்க்கரீதியாக நிலைநாட்டக்கூடிய பகுத்தறிவுடன் விளக்ககூடிய ஓர் நம்பகமான ஞானம்"

வீக்கிப்பீடீயாவின்படி:
"அறிவியல் என்பது உலகைப்பற்றிய அறிவுபூர்வமான தகவல்களை, பரிசோதிக்ககூடிய விளக்கங்களாக உருவாக்கும் ஓர் முயற்சி"

இவற்றில் "தர்க்கரீதியாக நிலைநாட்டுதல்" "பகுத்தறிவுடன் விளக்குதல்" "பரிசோதிக்ககூடிய விளக்கங்கள் " "நம்பகமான " போன்றவை கவனிக்கபடவேண்டியவை.

மேலே முனைப்பாக காட்டபட்டுள்ள எதனுடனும் ஜோதிடம் ஒத்துப்போவதாக என் அறிவுக்கு புலப்படவில்லை! உங்களுக்கு?

ஆக, நீதிமன்றம் "தர்க்கரீதியாகவோ" அல்லது "பகுத்தறிவுடனோ" செயல்படவில்லை.

மக்கள், குறிப்பாக பாமர மக்கள் நீதிமன்றங்கள் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். இது நீதிமன்றங்களின் பொறுப்பினை கூடுதலாக்குகிறது. இது போன்ற தீர்ப்புக்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

இவை நீதித்துறை வரலாற்றில் கரும்புள்ளிகளே...

THATS ALL YOUR HONOR...

முக்கியச்செய்தி: ஜாதகப்படி எதிர்காலம் சரியாக இருக்கும் குழந்தைகளுக்குதான் சத்துணவு, இலவசக்கல்வி போன்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படவேண்டும் என்று மத்தியப்பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார். இது எப்படி இருக்கு?

4 comments:

  1. nice try baskar...never know u are interested in blogging..

    keep up the good work. write more.

    mathu

    ReplyDelete
  2. Good Post. Mugiya seithi Matter supeeeeer. :)

    ReplyDelete
  3. Good Post. Mugiya seithi Matter supeeeeer. :)

    நன்றி. அடிக்கடி வரவும்.... :)

    ReplyDelete