Sunday, March 20, 2016

தஞ்சை மாவட்டத்தில் விவசாயி ஒருவர் டிரக்டருக்காக வாங்கிய கடனை வசூலிக்க சென்ற நிதி நிறுவன ஊழியர்களால் அவமான படுத்தபட்டுள்ளார். அதுவும் போலீஸ் துணையுடன்! அடுத்த சில தினங்களில் அரியலுர் மாவட்டத்தில் நிதி நிறுவனத்தால் டிரக்டர் பறிமுதல் செய்யப்பட்ட காரணத்தால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அப்படியே மற்றுமொரு செய்தியை ஒப்பிடுவோம். அரசு வங்கிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துவிட்டு இந்தியாவின் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான மல்லையாவை காணவில்லை! அவர் தப்பித்து ஒடவில்லை நாட்டைவிட்டு மிக எளிதாக வெளியேறியுள்ளார். உண்மையில் பெரும்  நிறுவனங்கள் வைத்துள்ள கடன் பாக்கியால் (Non-Performing Assets) பல வங்கிகள் தடுமாறும் பட்சத்தில், மான்யங்களும் சிறு கடன்கள் தள்ளுபடி செய்வதும்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளன என்று அரசாங்கமும் பொருளாதார நிபுணர்களும் ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கின்றனர். நிதி பற்றாகுறை, சர்வதேச பொருளாதார வீழ்ச்சி, விலையேற்றம் இப்படியாக சாமானியர்களுக்கு புரியாத வார்த்தை ஜாலங்கள்! சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதி அறிக்கையில்கூட கீழ்தட்டு மற்றும் நடுத்தர மக்களை நேரடியாக பாதிக்ககூடிய பல அறிவிப்புகள். விவசாயம், சிறுதொழிகள், கல்வி, மருத்துவம், வறுமை ஒழிப்பு என்று மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு தீர்வும் இல்லை. தீர்ப்பதற்கான எந்த முயற்சியும் இல்லை. 90-களில் தொடங்கி இதுதான் நிலைமை. மிக சிறிய சதவிததினரின் வளர்ச்சிக்காக பெரும்பாண்மை மக்களின் நலன் பறிக்கொடுக்கபடுகிறது. Definitely, not a case of mis-governance. ஆட்சியாளர்களால் தெரிந்தே அமுல்படுத்தபடுகிறது!

*****

சென்ற வாரம் அலுவல் நிமித்தமாக பெங்களூரு விஜயம். நண்பர் ஒருவர் அங்கிருக்கும் தனது உறவினருக்கு ஒரு சிறிய பார்சல் ஒன்றினை கொடுக்க சொல்லி தந்தார். அவரின் உறவினர் வீடு நான் தங்கிய இடத்திலுருந்து சுமார்
20 கிலோமீட்டர் தூரம். மீண்டும் நான் அங்கிருந்து செல்ல வேண்டிய இடம் கிட்டதட்ட அதே தூரம்.  இது அவருக்கும் தெரியும். ஆக அவர் கூரியர் செலவை மிச்சம் செய்துவிட்டார் எனக்குதான் கால் டாக்ஸி செலவு கூடியது. அதைவிட இரண்டு மணிநேர கால விரயம்! எழுத்தாளர் சுஜாதா எழுதியது ஞாபகம் வருகிறது - ”அமெரிக்கா பயணம் என்றால் நாம் செல்லும் நகருக்கு சம்மந்தம் இல்லாத ஏதோ ஒரு நகரில் வாழும் பக்கத்து வீட்டுகாரர் பேத்திக்கு ஊறுகாய் பாட்டில் கொண்டு செல்ல தயாராக வேண்டும்.”



Thursday, January 1, 2015

Can You Control The Future?

Yet another year has come to an end!

Ups and downs.  Successes and failures.  Sweet and bitter memories. The year has ended with experiences ranging wildly between extremes. 

The New Year has dawned with lots of hopes and expectations and us unsure of the path to be travelled.

At this juncture, I would like share an excellent analysis about the future by Peter Theil, who co-founded PayPal and made investments in companies like Facebook,  SpaceX and LinkedIn. In his just released book Zero to One asks ‘CAN YOU CONTROL THE FUTURE?’ The excerpts: 

You can expect the future to take a definite form or you can treat it as hastily uncertain. If you treat the future as something definite, it makes sense to understand is in advance and to work to shape it. But if you expect an indefinite future ruled by randomness, you’ll give up on trying to master it. 
You can also expect the future to be either better or worse than the present. Optimists welcome the future; pessimists fear it. Combining these possibilities yields four views.  
Indefinite Pessimism: An indefinite pessimist looks out onto a bleak future but he has no idea what to do about it. He just reacts to events as they happen and hope things don’t get worse. The indefinite pessimist can’t know whether the inevitable decline will be fast or slow, catastrophe or gradual. All he can do is wait for it to happen.
Definite Pessimism: A definite pessimist believes future can be known, but since it will be bleak, he must prepare for it.
Definite Optimism: To a definite optimist, the future will be better than the present if he plans and works to make it better.
Indefinite Optimism: To an indefinite optimist, the future will be better, but he doesn’t know how exactly, so he won’t make any specific plans. He expects to profit from the future but sees no reason to design it concretely.  

Now, can you control your future? 

HAPPY NEW YEAR!!!

Saturday, November 15, 2014

Albert Einstein's Letter to His Son

In 1915, aged 36, Albert Einstein was living in Berlin, while his wife Mileva, and their two sons, Hans Albert Einstein and Eduard "Tete" Einstein were living in Vienna. Having just completed the two-page masterpiece that would catapult him into historical glory, 'The Theory of General Relativity', Einstein sent 11-year old Hans Albert the following letter, suggesting "creative absorption" as fuel for "engine of learning":  

My dear Albert,
Yesterday I received your dear letter and was very happy with it. I was already afraid you wouldn’t write to me at all any more. You told me when I was in Zurich, that it is awkward for you when I come to Zurich. Therefore I think it is better if we get together in a different place, where nobody will interfere with our comfort. I will in any case urge that each year we spend a whole month together, so that you see that you have a father who is fond of you and who loves you. You can also learn many good and beautiful things from me, something another cannot as easily offer you. What I have achieved through such a lot of strenuous work shall not only be there for strangers but especially for my own boys. These days I have completed one of the most beautiful works of my life, when you are bigger, I will tell you about it.
I am very pleased that you find joy with the piano. This and carpentry are in my opinion for your age the best pursuits, better even than school. Because those are things which fit a young person such as you very well. Mainly play the things on the piano which please you, even if the teacher does not assign those. That is the way to learn the most, that when you are doing something with such enjoyment that you don’t notice that the time passes. I am sometimes so wrapped up in my work that I forget about the noon meal. . . .
Be with Tete kissed by your
Papa.
Regards to Mama.

Wednesday, September 17, 2014

Blind Nationalism: The Israel-Palestine Conflict

The recent killings of three Israeli youth have triggered an another round of conflict in this strife prone part of the globe. Over 750 targets have been attacked by Israel. Hundreds of long range missiles from Gaza slammed Israel. Israel is readying for a full scale invasion of Gaza. It has authorized mobilization of 40000 reserve troops in preparation for the ground assault. On the other hand, Hamas, which is more or less running a proxy government has called for the Palestinian government to take up arms. And, observers are predicting a Third Intifada, which surely will lead to more bloodshed.

Since 1947, Israel and Palestine have been involved in an ongoing struggle over land, particularly two regions - Gaza Strip and West Bank. History reveals the cause of the conflict in the region.

In the 19th century the land of Palestine was inhabited by a multicultural population – approximately 86 percent Muslim, 10 percent Christian, and 4 percent Jewish. In the late 1800s, an extremist minority among the Jewish population - Zionists, from Europe decided to create an exclusive Jewish state. They considered locations in Africa and the Americas, before settling on Palestine. At first, this migration created no major problems. Hitler's rise to power and several other factors led to increased Jewish migration to Palestine, and conflict grew. Finally, when the United Nations intervened in 1947, under considerable influence from West, particularly US, it recommended giving more than 50% of Palestine to a group that was only 30% of the total population to form Jewish state. Subsequently, at the end of the 1947-49 war with the Arab nations, Israel captured more than 75% of Palestine and Palestinians were made refugees in their own land. In 1967, with a surprise & successful attack on Egypt, Israel occupied the final piece of Palestine - the West Bank and Gaza Strip. And that's the core of this continuing conflict.

Israel's continued military occupation is extremely oppressive. Over 10,000 Palestinian men, women, and children are held in prisons, most without fair trial. Palestinian borders are controlled by Israeli forces leading to escalated humanitarian crisis. At the end of 80's, Palestinians sparked a series of protests and riots. The same became known as "Intifada" or "Uprising" and resulted in the deaths of over 1000 Palestinians and 100 Israelis. The Second Intifada during the beginning of this century claimed the lives of around 3000 Palestinians and over 1000 Israelis.

Both sides of the conflict have been guilty of war crimes. Israel has indulged in killing of civilians, forced evictions, illegal detention and torture of prisoners. Palestine has also it's share of violations like torture and executions without trial. The deepest tragedy of the whole situation is the death of children, which neither side of the conflict seems to worry about. While Hamas soldiers are using children as human shields Israeli soldiers are shooting down teenagers in the streets. Both sides are staging their war with complete disregard of the innocent people around them. Stories of orphaned children and families ripped apart resonate to the core of the human conscience.

If you look at the conflict, casting aside all political and territorial disputes, it is the most basic human right of all that is being violated - THE RIGHT TO LIVE.

Wednesday, July 30, 2014

Child Labor - Political & Social Failure


Wikipedia describes Child Labour as, employment of children in any work that deprives children of their childhood, interferes with their ability to attend regular school, and that is mentally, physically, socially or morally dangerous and harmful.

Poverty, limited access to free & compulsory education, inadequate laws and poor enforcement of the same, are cited as the major causes of child labour. Around the world the growing gap between the rich and the poor have forced children into child labour. Parts of Africa, Asia and Latin America are the worst affected by this phenomenon.

A lot has been discussed, debated and written on the subject. And that's not the discussion now!

Bolivia, a Latin American country has become the first nation globally to legalize child labour. It has reduced the legal age from 14 years to 10 years. The new law violates the ILO protocol on child labour. The Bolivian government says there are lot of safeguards against exploitation. But everyone knows it will be of little impact.

Perhaps Bolivia could not find a way to end child labour. The Bolivian government says it simply acknowledges the reality and has to live with it. 

Child right activists disagree. They say child labour is a short term solution. According to them, it is not poverty the cause of child labour but it is the other way around. Child labour leads to poverty in long run. 

It is too easy to get angry at Bolivia for taking such a regressive step. But it would be better to accept that we, and our political and development leaders, have collectively failed to address the political and social challenges. The problem of child labour is more a social and political phenomena than an economic one.

Statistics across the globe has shown that the number of working children has fallen directly proportionate to reduction of poverty however the same requires a social and political approach.

Sunday, July 27, 2014

உடைந்த ஜன்னல்

சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு அற்புதமான வலைப்திவு ஒன்றினை பகிர்ந்தார். அந்த ஆங்கில பதிவின் தமிழ் சாரம், கீழே:

90-களில் நியுயார்க் மாநகரில் குற்றங்கள் எல்லை மீறி கொண்டிருந்தன. அப்போதைய மேயரும் நகர காவல்துறை ஆணையரும் அதனை கட்டுக்குள் கொண்டுவர நூதன யுத்தி ஒன்றினை கையாண்டனர். ‘உடைந்த ஜன்னல்’, அதன் பெயர். அதன் பலன், இன்று நியுயார்க் நகரம் அமெரிக்காவின் மிகவும் பாதுக்காப்பான நகரங்களில் ஒன்று!

சின்ன குற்றங்கள் பெரிய குற்றங்களுக்கு வழி வகுகின்றன என்ற ஒரு சாதாரண யூகத்தின் அடிப்படையில் அமையபெற்ற ஒரு யுத்தி.

அக்கம்பக்கத்தில் உள்ள உடைந்த ஜன்னல்கள் ஏதோ ஒன்றினை பறைசாற்றுகின்றன! ஆனால் அங்குள்ளவர்களும் சரி போலீசாரும் சரி அதனை பெரிதுபடுத்துவதில்லை. சிறு குற்றங்கள் கண்டுகொள்ளாத பட்சத்தில் பெரும் குற்றங்கள் நடைபெற தொடங்குகின்றன. போதை பொருள், கொலை என்று பட்டியல் நீளுகிறது.

மக்கள் குடிவர தயங்குகின்றனர், மளிகை மற்றும் சிறு கடைகள் மூடப்படுகின்றன, டாக்ஸிகள் உள்ளே வருவதில்லை. மெல்ல மெல்ல சம்மந்தப்பட்ட பகுதி குலைய தொடங்குகிறது.

இந்த புதிய முறையில் போலீசார் எந்த சிறிய குற்றத்தையும் உதாசீனப்படுத்துவதில்லை. பத்திரிகைகளின் தலைப்பு செய்திகளில் வரும் குற்றங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சாதாரணமானவைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. நாளடைவில குற்றங்கள் மெல்ல குறைய தொடங்கி இன்று நியுயார்க் மாநகரம் ஒரு பாதுக்காப்பான நகரமாய் திகழ்கிறது.

இதில் இந்திய போலீசார் கற்க வேண்டியது நிறைய உள்ளது! அதைவிட, நம்மிடையே நிலவும் இனவெறியை இதனுடன் ஒப்பிடுவோமே!

இனவெறி, பாலியல் பாகுப்பாடு போன்றவை சிறிய அளவில் நடைபெறும் பொழுது நாம் வேறு பக்கம் திரும்பிகொள்கிறோம். சமூகதின் இந்த அக்கறையின்மைதான் பெரிய குற்றங்களுக்கு வழி வகுக்கிறது. 

ஒரு அமைச்சர் குடிபெயர்ந்த ஒருவரை அவமதிகிறார்; விளையாட்டு வீரர் ஒருவரின் தேசப்பற்று சந்தேகிக்கபடுகிறது; குடும்பத்தில் பெண்கள் அவமதிக்கபடுகின்றன; இவைதான் சமூகத்தின் ‘உடைந்த ஜன்னல்கள்’ 

நாம் கண்டுகொள்ளும் அளவிற்கு இது ஒரு பெரிய விவகாரம் அல்ல என்று நினைகிறோம். இது சரியான நிலைபாடு அல்ல.

ஒரு இனவெறியனின் சிறிய வெறுப்புணர்வு கண்டுகொள்ளாத பொழுது, அவன் அதனுடன் திருப்தி அடைவதில்லை. இன்னும் பெரிதாக ஏதோ ஒன்றினை செய்ய முயல்கிறான். எவரும் அவனை பெரிதுபடுத்தாதவரை இது இன்னும் பலரை தொற்றுகிறது. சீரழிவை நாம் உணரும் முன், மேலும் மேலும் பல வெறியர்கள் இதனை முயல்கின்றனர்! 

சமூகம் இரத்தமயமாவதை தடுக்க சிறிய எல்லை மீறல்களை ஆரம்பம் முதலே தடுக்கப்பட வேண்டும். முளையிலேயே கிள்ளப்படவேண்டும். இது மற்றவர்களை கட்டுப்படுத்தும். எல்லாவற்றுக்கும் மேலாக சமூகம் இனவெறியை சகித்துகொள்வதற்க்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கபடும்! 

”உடைந்த ஜன்னல்’ யுத்தியில் நாம் கற்றுகொள்ளக்கூடிய ஒரு முக்கிய பாடம்.  


Saturday, July 12, 2014

ஆரவாரம்

நரேந்திர மோடி அரசின் முதல் பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்புகளிடையே இந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது வருடம்தோறும் நடைபெறும் சடங்குதான் என்றாலும் இந்த வருடம் சற்று அதிகமான ஆர்ப்பாட்டம். பட்ஜெட் பற்றிய கருத்துக்களும் அறிக்கைகளும் வழக்கம்போல் யார் எந்த பக்கம் என்பதை ஒத்தே சொல்லப்பட்டன. முப்பது நாட்களில் விலைவாசி கட்டுப்படுத்தப்படும், இந்திய நாணயத்தின் மதிப்பு நிலைநிறுத்தப்படும், வருமான வரியின் உச்சவரம்பு உயர்த்தப்படும், தேவையற்ற மான்யங்கள் நீக்கப்படும், நிதி பற்றாகுறை கட்டுக்குள் வரும், இப்படியாக மிகைபடுத்தப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள். இந்த அதீத எதிர்பார்ப்புகளின் விளைவினால் அதே அளவிலான ஆர்ப்பாட்டமும். ஆனால், இவை எதற்கும் முறையான அறிவிப்புகள் இல்லை. கடந்த காலங்களில் மன்மோகன்சிங் அரசு செய்ததையே இந்த அரசும் சிறுசிறு மாற்றங்களுடன் செய்துள்ளது. பழைய கள் புதிய மொந்தையில், அவ்வளவே!



ஆனாலும் மீடியா செய்த ஆரவாரம்தான் தாங்க முடியவில்லை. நிதி அமைச்சர் வீட்டிலுருந்து புறப்படுகிறார், அலுவலகம் வந்துவிட்டார், பாராளுமன்றத்தை நெருங்கிவிட்டார், மஞ்சள் குருதா அனிந்துள்ளார்.....இப்படி செய்திகள். தொலைகாட்சி அரங்குகளில் பாராளுமன்றத்தைவிட அதிக கூச்சலுடன் கூடிய கலந்துரையாடல்கள். பிரதம மந்திரி, நிதி மந்திரி தொடங்கி சாமான்யன் வரை அனைவருக்கும் ஆலோசனைகள்! தொலகாட்சி அரங்குகளில் இந்த நிலை என்றால், பத்திரைகைகளும் தாங்களும் எந்த விததிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபித்தன. அவைகளும் தங்கள் பங்குக்கு இலவச ஆலோசனைகளை அள்ளி வழங்கின! விதவிதமான கிராஃபிக்ஸ் மூலம் அசத்தின. கால்பந்து உலகக்கோப்பை வெகுவாக கைகொடுத்தது.  

கல்யாணம், காதுகுத்து முதல் ரஜினி பட வெளியீடு வரை எதுவாயினும் ஆரவாரதிற்க்கு குறைவில்லாதவர்கள் நாம்! இந்த திறமை நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்று!!

Saturday, July 5, 2014

உடற்பயிற்ச்சியும் இசையும்

காலை அல்லது மாலை என்று நேரம் கிடைக்கும் பொழுது அருகில் உள்ள பூங்காவில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அங்கு வரும் விதவிதமான மணிதர்களை வேடிக்கை பார்ப்பது மிகவும் சுவாரஸியமான ஒன்று! கதையளக்கும் பெண்கள், கடைசியாக படித்த/பார்த்த செய்தியை காரசாரமாக விவாதிப்போர், ஒய்வு பெற்ற முதியோர், ஒரே நாளில் உடல் எடையை பாதியாக குறைக்க முயல்வோர், எதைபற்றியும் கவலைபடாத குழந்தைகள், இப்படி பல! அங்கு நான் உடற்பயிற்சி செய்யும் நேரத்தைவிட இந்த பொழுதுபோக்குகளை வேடிக்கை பார்க்கும் நேரம்தான் அதிகம். இதில் எல்லாவற்றிலும் பொதுவான ஒன்று காதில் ஹெட்ஃபோனை மாட்டிகொண்டு இசையை ரசித்து கொண்டே உடற்பயிற்ச்சி செய்யும் நபர்கள்! பொழுதுபோக்கு, மனதை ஒரு நிலைபடுத்துதல் என்று இதற்கு பல காரணங்கள் சொல்லபடுகின்றன! இதில் எது சரி என்று எனக்கு புலப்படவில்லை!!!
பின்குறிப்பு: சில தினங்களுக்கு முன் நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவரும் எல்லோரையும் போல் ஹெட்ஃபோனுடன் நடந்து கொண்டிருந்தார். இசை என்றால் காத தூரம் ஓடும் நபர் அவர் என்பதுதான் இதில் விஷேசம்!

Thursday, June 5, 2014

பள்ளியில் முதல் நாள்

தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்ப்பட்ட “அம்மா” உணவகங்கள் இம்மாதத்தில் திறக்கப்படும் என சில தினங்களுக்கு முன் முதல்வர் அறிவித்துள்ளார். இது அடிதட்டு மக்களிடையே பெரும் ஆதரவை பெற்ற ஒரு அருமையான திட்டம். இவ்வுணவகங்களை பார்வையிட்ட எகிப்திய நல்வாழ்வு அமைச்சர் இத்திட்டதினை எகிப்தில் செயல்படுத்துவதை பற்றி பேசியுள்ளார். அந்த ஒரு நோக்கதுடன்தான் அவர் இந்த உணவகங்களுக்கு விஜயம் செய்துள்ளார். அதே தமிழக அரசிடமிருந்து, அடுத்த சில தினங்களில் மற்றுமொரு அறிவிப்பு. அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ‘உயர்வகை’ (ELITE) மதுபான கடைகள் திறக்கப்படும், என்பதே அது! குளிரூட்டபட்ட இக்கைடைகள் தற்பொழுது சென்னையில் மிகவும் பிரபலம். வெளிநாட்டிலுருந்து இறக்குமதி செய்யபட்ட மதுவகைகள் விற்கப்படும் இக்கடைகள் அதிநவீன மால்களிலும் பெரிய வணிக வளாகங்களிலும் செயல்படும். இரண்டு அறிவிப்புக்கும் உள்ள வேறுபாடு மலைக்க செய்கிறது! ஒன்று, அடிதட்டு மக்களுக்கு பேருதவியாக உள்ள ஒரு வெகுஜன திட்டம். மற்றொன்று, அதே மக்களின் நல்வாழ்வுடன் விளையாடும் ஒரு நச்சு திட்டம். கோளாறு நம்மிடமா அல்லது அரசியல் செய்பவர்களிடமா?  
                                                     o0O0o

கோடை விடுமுறை முடிந்து இந்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளியிலுருந்து வந்த மகனிடம் முதல் நாள் அனுபவங்கள் பற்றிய சுவாரசியம். பிறகு பிராஜக்ட் பற்றிய பேச்சு. உலக வரைபடத்தில் சில வேலைகள், பிறகு அது லேமினேட் செய்யபட வேண்டும். இப்படியாக பல அறிவுறுத்தல்கள். இந்த பிராஜக்ட்டுகள் விலைக்கு கிடைகின்றன என்பது ஊரறிந்த கதை. மாணவர்களுக்கு பிராஜக்ட்டுகள் என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால், பள்ளி ஆரம்பித்த முதல் நாளேவா?!?     

Monday, May 26, 2014

பங்காளி சண்டை

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிபெண்கள் பிரம்பிப்பூட்டுகின்றன. முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 450-க்கும் அதிகம். தேர்ச்சி விகிதம் சுமார் 90 சதவிதம். இது ஒருபுறம் சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்றாலும், தமிழகத்தில் கல்வி மேலாண்மை சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி எழும்புகிறது. ”இதே நிலை நீடித்தால் அனைவரும் 500க்கு 500 பெற்றாலும் ஆச்சரியமில்லை. திறமையான மாணவர்களை குலுக்கல் முறையில் தான் தேர்தெடுக்க வேண்டும்” என்று கல்வியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர். தமிழகத்தைவிட தேர்ச்சி விகிதம் குறைவாகவுள்ள கேரள மற்றும் ஆந்திர மாநிலங்களில் மாணவர்கள் அகில இந்திய அளவிலான தேர்வுகளில் அதிக அளவில் வெற்றி பெறுகின்றனர். மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் தமிழக மாணவர்கள் அகில இந்திய நுழைவுத்தேர்வுகள், ஐஏஎஸ்., போன்ற தேர்வுகளில் சாதிப்பது இல்லை! குறைபாடுகள் நிறைந்த பாடதிட்டம், எளிதான கேள்விதாள்கள், மதிப்பெண்களை அள்ளி வழங்குதல், இப்படி பல காரணங்கள் தமிழகத்தின் கல்வி தரத்தை கேள்விகுறியாக்குகின்றன என்பது ஒரு வாதம். அது சரியே. ஆனால், இந்த நிலைக்கு என்ன காரணம்? வருடம்தோறும் அதிகரிக்கும் தேர்ச்சி விகிதம் அரசின் சாதனையாக பறைசாற்றப்படுகிறது. ஆட்சியாளர்கள் தங்களது சாதனை பட்டியளுக்காக மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்கள், அவ்வளவே.  

o0O0o

ஆந்திர மாநில பிரிவினைக்கு பின், இரு மாநிலங்கள் இடையே நடைபெறும் ”பாகபிரிவினை” பங்காளி சண்டையினை போல் உள்ளது. முன்னால் ஆந்திர அரசின் சொத்துகள், கடன்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த அசாத்தியமான பணியினை  இதற்க்கென அமைக்கபட்ட கமிட்டிகள் திறம்பட நிறைவேற்றியுள்ளன. அரசு ஊழியர்கள் விவகாரத்தில், சீமந்தரா பகுதியில் பிறந்த மற்றும் படித்த ஊழியர்கள் ஆந்திர மாநிலத்திலும் தெலுங்கானா பகுதியில் பிறந்த மற்றும் படித்த ஊழியர்கள் தெலுங்கானா மாநிலத்திலும் பணிபுரிய வேண்டும் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், சீமந்திராவினர் சிலர் தங்கள் சொந்த செளகரியதிற்காக தெலுங்கானாவில் தொடர்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு, தெலுங்கானாவிற்க்காக போராடியவரும் தெலுங்கானா மாநிலத்தின் முதல் முதல்வருமான சந்திரசேகர ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த அரசியலுக்கு தெலுங்கானாவிலும் ஆதரவு. காவிரிநீர் பங்கீடு, முல்லை பெரியாறு அணை அல்லது மும்பையில் வேற்று மாநிலத்தினருக்கான எதிர்ப்பு போன்ற விவகாரங்கள் ஏதோ புரிகிறது. ஆனால், ஒரே தாய்மொழியை பேசிக்கொண்டு இவ்வளவு காலமாக தங்களை ஒரு மாநிலத்தினராக அடையாளப்ப்டுத்தி கொண்டிருந்த இவர்களிடையே இப்படியொறு குரோதத்தை எப்படி விதைக்க முடிந்தது? புரியவில்லை!!!  

Friday, May 23, 2014

ஃபைவ் ஸ்டார் பள்ளிகள்

சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் மான்யம் மற்றும் இலவசம் ஆகியவற்றுக்கு எதிராக பிரச்சாரம். படித்த நடுத்தர வர்க்கத்தின் பங்கு இதில் அதிகம். தேர்தலை மனதில் கொண்டு இலவசங்கள் அறிவிக்கபடுகின்றன என்பது ஒரு வகையில் உண்மைதான். ஆனால் அனைத்தையும் இப்படி ஒட்டுமொத்தமாக ஒதுக்க முடியாது. வளரும் நாடுகளில் அடிதட்டு மக்களுக்கு சில சலுகைகள் அவசியம். இங்கு அது சரியானவர்களை சென்றடைகிறதா என்று வேண்டுமானால் விவாதிக்கலாம். வளர்ந்த நாடுகளில்கூட மான்யங்கள் நடைமுறையில் உள்ளன. அடிப்படை கல்வி மற்றும் மருத்துவம் சிறந்த உதாரணங்கள். பெரும்பாலான நாடுகள் இன்றும் இவையிரண்டையும் இலவசமாகவும் தரமாகவும் வழங்குகின்றன. நம்மிடம் பின் தங்கியுள்ள மனிதவள மேம்பாட்டு தேவைகள் ஏராளம். அவை அனைத்தும் எல்லா தரப்பு மக்களையும் சரியான முறையில் சென்றடைவதற்கான வழிமுறைகளை நாம் ஆராய வேண்டும். அது சரி, சமையல் எரி வாயு மற்றும் டீசல் போன்றவற்றிற்க்கான மான்யம் நீக்கப்பட்டு முழு விலையும் கொடுக்க தயார் என்று இதே சமூக வலைதளங்களில் ஒரு பிரச்சாரம் செய்தால் என்ன?

o0O0o

பள்ளிகளில் அட்மிஷன் சீசன் தொடங்கிவிட்டது. பெற்றோர் ஒரு பக்கம் பள்ளிகளின் தரத்தினை ஆராய்ந்து அலைந்து கொண்டிருகின்றனர். மற்றோரு பக்கம் பள்ளிகள் தங்கள் தனிதன்மையை பறைசாற்றி ‘பிள்ளைப்பிடிக்கும்’ மகத்தான பணியை செவ்வன செய்துகொண்டிருகின்றன. ‘பல ஏக்கர் வளாகம், குளிருட்டப்பட்ட வகுப்பறைகள், நவீன சாதனங்கள், சர்வதேச கல்விமுறை, பன்னாட்டு உணவு’ - இப்படி நீண்ட பட்டியல். இப்படிப்பட்ட பள்ளிகளை ’தி இந்து’ நாளிதழில் ஒரு கட்டுரையாசிரியர் ’ஃபைவ் ஸ்டார் பள்ளிகள்’ என்று குறிப்பிட்டிருந்தார். காலமாற்றம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை இதனை அவசியமாக்குகிறது என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் வெறும் கட்டிடங்களும் கருவிகளும் நல்ல கல்வியை தராது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ‘ஃபைவ் ஸ்டார்’ வசதிகள் வளரும் குழந்தைகளிடம் நல்ல பண்புகளை உறுதி செய்யுமா என்பதுதான் முக்கியமான கேள்வி. 

Thursday, May 22, 2014

Right To Education

With the vacations over the education season has started. More than the admissions to higher education its the school admission that is causing much anxiety to parents, as usual.

The so called elite institutions are refusing to issue applications under the RTE quota or doing so just for namesake.  Now that's not the issue. Why the same is neither highlighted nor debated? No one seems to be concerned - government, political parties, media, community and finally the school managements!

The media, particularly the electronic media, has its other priorities driven by more vital commercial considerations; The middle class looks the other way and it will make noise if there is quota for subsidized LPG; In fact, some are even arguing against RTE; No social activist sits at Raj Ghat.

The same has not been made an issue at the recently concluded elections by none of the major political parties. Neither the opposition nor the government looked into this. Their priorities lie elsewhere.

Mr.Obama won his first presidential elections on a single point agenda - reforming the American healthcare system. The focus was on providing more Americans with access to affordable health insurance, improving the quality of healthcare and ultimately reducing healthcare spending at US. Debates, discussions, wide media coverage, opinion surveys - it roused the American community. While religion, caste or language has so much impact on us why not the same with such livelihood issues?   Maybe, we are either more emotive or irrational.

Sunday, April 20, 2014

None Of The Above

Election season. As usual this election too being termed 'make-or-break', 'the ultimate', blah, blah.... But in my view its just another issue-less one like many in the recent past. All the stakeholders, political class, media and even the electorate, no one is talking about any livelihood issues such as healthcare, education, access to safe drinking water, sanitation, public transport, environmental degradation, exploitation of natural resources, etc.

Let's look into two basic needs - education & healthcare. Successive governments have ensured enhanced enrollment of children in schools through various schemes. But quality? Such children are in a weak situation throughout their career. Its the same with healthcare. In-spite of various programs quality healthcare is out of reach for the majority. This is leading to massive privatization of these two sectors. While the rich are able to access the same the under privileged are a disadvantaged lot who are compelled to either use the cheaper but insufficient system or pay exorbitant price.
                                       
                                                    


No major political party or politician has addressed these concerns as they know well the electorate is more concerned about religious, caste or linguistic identities than the real livelihood issues.



I'm not sure a change in government is going to make any visible impact. Afraid I may press NOTA, though its not the right solution.

Thursday, March 6, 2014

Indian Icon

Hindustan Motors, India's oldest car maker has suspended production the iconic Indian car, Ambassador citing debts and lack of demand. It shut down its plant at West Bengal where it has been manufacturing the Ambassador - based on Britain's Morris Oxford - since 1957.

Some rare glimpses of "The grand old lady of Indian roads":











Saturday, December 28, 2013

IMMUNITY

The arrest of an Indian diplomat at US has created a lot of ripples back at home. Non-stop trending at social media; noisy debates at TV studios;  extreme reactions by the political class - in fact, a political leader talked about the caste of the arrested. The diplomat was arrested on charges of not paying minimum wages to domestic help. She was handcuffed and strip searched. While we may be right in protesting the humiliation we can't escape the fact that our diplomat has violated the law. The  controversy has sparked a heated debate about diplomatic immunity.

But the row makes me ponder about the immunity the privileged are enjoying in our country. Sanjay Dutt, a convict in Mumbai blasts case is out on parole frequently; Maya Kodani, ex-minister in Gujarat and convict in Gujarat riots case is also out on parole; trial of Salman Khan's poaching case is going on for decades; no FIRs in accident cases involving millionaires' kids. This when many are languishing in prisons across the country unable to provide the requisite  surety or bear the legal costs.

So two Indias. One not in a position to access even the minimum legal safeguards. The other absolutely  immune from everything.

Sunday, September 15, 2013

வெள்ளையம்மாளின் மரணச்செய்தி

நாட்டின் தலைநகரில் சில மாதங்களுக்கு முன் ஓடும் பேருந்தில் இளம்பெண் கற்பழிப்பு மற்றும் கொடூர தாக்குதல், சம்பவம் நடந்த சில தினங்களுக்கு பின் அந்த பெண் மரணம், இக்கொடும் செயலில் ஈடுப்பட்ட அனைவரும் துரிதமாக கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சமூகத்தின் விளிம்பில் வாழ்பவர். சமீபத்தில் மும்பையில் நடந்த கற்ப்பழிப்பு வழக்கிலும் குற்றவாளிகள் அனைவரும் அதே நிலையில் உள்ளவர். இந்த ஒற்றுமை குற்றவாளிகள் உருவாவதற்க்கு அவர்கள் வாழும் சூழலா, வளர்ந்த விதமா போன்ற விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணுரிமை பற்றி ஒரு சாரார் வாதிட்டால் மற்றொரு பக்கத்தில் அவர்கள் உடுத்தும் உடை சம்மந்தமான அறிவுரை வழங்கபடுகிர்து!  இதில் கடைசியாக சேர்ந்திருப்பது குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை பற்றிய விவாதம்! டெல்லி சம்பவதில் அனைவரின் குற்றங்கள் நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் சிறுவர் என்பதால் சிறார் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். (ஒருவர் வழக்கு நடைபெறும்பொழுது தற்கொலை செய்துகொண்டார்) மற்ற அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இப்பொழுது மரண தண்டனைக்கு எதிரான குரல்கள். மரண தண்டனை தேவையா இல்லையா என்ற விவாதங்கள் ஒருப்புறம் இருக்கட்டும், சட்டத்தில் அதற்கான இடம் இருக்கும்வரை அதனை பிரயோகிப்பதில் என்ன தவறு? இதையெல்லாம் தாண்டி இந்த வழக்கு மேல் முறையீட்டிற்க்கு வரும்பொழுது இது ஆயுள்தண்டனையாக  குறைக்கப்பட வேண்டும் என்று இந்து நாளிதழ் நீதிமன்றத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளது!!! இப்படியாக, என்ன குற்றத்திற்கு என்ன தண்டனை என்று நீதிமன்றத்திற்கு வெளியே எல்லோரும் முடிவு செய்ய ஆரம்பித்துவிட்டால் சமூகத்தில் குற்றங்கள் குறையுமா? கூடுமா?

 o0O0o

தஞ்சை பெரிய கோயிலில் சுமார் 33 ஆண்டுகளாக பக்தர்களையும் சுற்றுலா பயணிகளையும் ஆசிர்வதித்து, வரவேற்று, மகிழ்வித்த ‘வெள்ளையம்மாள்’ என்ற 63 வயது யானை நேற்று மரணம் அடைந்தது. ஏழு ஆண்டுகளுக்கு முன் முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டது. ஆனால், வெள்ளையம்மாள் தன் கடமையை ஒரு நாள்கூட தவறவில்லை. தஞ்சை மக்கள் பலருக்கு ஒரு உறவை இழந்த உண்ர்வு. மாவட்ட ஆட்சியரில் ஆரம்பித்து அஞ்சலி செலுத்துவதற்க்கு பெரிய கூட்டம்.  கோயிலுக்கு வரும் பெரியவர் முதல் சிறியவர் வரை அதனிடம் ஆசிர்வாதத்திற்க்கு நிற்கும் நீண்ட வரிசை; அதன் முதுகில் ஏற்றபடும் குழந்தைகள்; அதனருகில் நின்று புகைப்படம் எடுத்துகொள்ளும் நபர்கள்; அன்புடன் வழங்கப்படும் உணவுபண்டங்கள்; அருகில் சென்றவுடன் வீறிட்டு அலறும் குழந்தைகள்; இப்படியாக அந்த இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். நான் அந்த கோயிலுக்கு செல்லும்போதெல்லாம் அங்கு சிறிது நேரம் இதனை வேடிக்கை பார்ப்பது வழக்கம். இச்செய்தியினால் எனக்கு பல சிறு வயது ஞாபகங்கள்! வருத்தமும்தான்.

o0O0o


இரண்டு தினங்களுக்கு முன் பாரதீய ஜனதா நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு ஆர்எஸ்எஸின் ஆசிர்வாததுடன் ஏகப்பட்ட திரைமறைவு வேலைகள். இந்த அறிவிப்பு பாஜாகவையும் அதன் பிரதமர் வேட்பாளர் மோடியையும் அரியனையில் ஏற்றுமா என்பது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்ட அத்வானியின் அரசியல் வாழ்க்கையை இது முடித்துவிட்டது. இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன் அவர் நடத்திய ரத யாத்திரை பாஜாகவின் அரசியல் வளர்ச்சியில் ஒரு மைல்கல். அது அக்கட்சி ஆட்சியில் அமர்வதற்கு வழிவகுத்தது. இந்த காலகட்டதில்தான் அவர் மகாஜன், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, வேங்கையா நாயுடு, உமா பாரதி போன்ற இரண்டாம் நிலை தலைவர்களை வளர்த்தார். இந்த பட்டியலில் நரேந்திர மோடியும் அடக்கம்! ஆட்சியில் அமர்வதற்க்கு கூட்டனி அமைவதற்க்காக மற்ற கட்சிகள் ஏற்றுக்கொள்ளகூடிய மிதவாத முகம் கொண்ட வாஜ்பாயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினார். இப்போழுது நிலவும் சூழ்நிலையில் மோடியைவிட தான் ஒரு மிதவாதி என்று நம்பினார். எப்படியும் இந்த முறை வாய்ப்பை கைப்பற்ற எல்லா முயற்சியும் செய்தார். ஆனால், மோடி அவரை மிஞ்சிவிட்டார். வளர்த்த கடா மாரில் பாய்ந்துள்ளத்து. கவுண்டமனி பாஷையில் “அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்மப்பா”           

Monday, February 13, 2012

காதலர் தின சிறப்பு ஏற்பாடுகள்

’எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்குமோ என்ற ஏக்கமோ வாட்டமோ இல்லாமல் நிகழ்கால விளையாட்டுக்களில் கவலையற்று ஈடுபடிட்ருந்த பச்சிளம் பருவம். அந்த பருவம் மனிதனால்  மற்றோரு முறை சந்திக்கக் கூடிய பருவமா?’ - சிறு வயது பிராயம்பற்றி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் கருணாநிதி. ஆனால், சென்னையில் பதினைந்து வயது பள்ளி மாணவன் அவனை கண்டித்த ஆசிரியை ஒருவரை குத்தி கொன்றுள்ள சம்பவம் குழந்தைகள் அப்படி ஒரு சுழலில் வளரவில்லை என்கிறது. இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்று ஒதுக்கிவிட முடியாது. பெரும்பாலான குழந்தைகள் ஏதோ ஒரு நெருக்கடி அல்லது நிர்பந்ததுடன்தான் வளர்கின்றன. பெற்றோர்கள் வளரும் குழந்தைகளிடம் வைக்கும் அதீத எதிர்பார்ப்புதான் இதற்கு முக்கிய காரணம். உறவினர் பிள்ளை அல்லது பக்கத்து வீட்டு பிள்ளையைவிட அதிகம் படிக்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும், நிறைய சாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. வளரும் பருவத்திலேயே பெரியவர்களுக்கு உள்ள அதே மன அழுத்தம் குழந்தைகளுக்கும். நம்மிடம் உள்ள போட்டி, பொறாமை, வன்மம் ஆகியவற்றை நம்மையும் அறியாமல் குழந்தைகள் மனதில் விதைக்கிறோம். குழந்தைகள் குழந்தைகளாக வளர விடப்படவில்லை. Thats the regret.

                                                                                      o0O0o

சோ ராமசாமி தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் (அரசியல் தரகு வேலையும் உண்டு, இதனை அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒப்பு கொண்டுள்ளார்). சமீபகாலமாக அளவுக்கதிகமாக ஜெயலலிதாவின் புகழ் பாடிகொண்டிருக்கிறார். இந்த வாரம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராகும் சிறப்பு வழக்கறிஞரை ராஜினாமா செய்ய கர்நாடகா பாஜக அரசு நெருக்கடி கொடுத்துள்ளது. இவர் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்டவர் என்பதினால் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். பதிலாக கர்நாடகா அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்து, நீதிமன்றம் அவர் மேல் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார். சோ ராமசாமி இந்த விவகாரதிற்கு என்ன வியாக்கியானம் கொடுக்கிறார்?

                                                                                       o0O0o
 
மதுரை சுற்றுசுழல் பூங்கா.  வாக்கிங் செல்வது மற்றும் குடும்பத்துடன் பொழுதுப்போக்க வருவது என மதுரைவாசிகளின் பல தேவைகளை இப்பூங்கா பூர்த்தி செய்கிறது. இப்படி வருவோர்களில் நானும் ஒருவன். இந்த பூங்காவிற்கு மற்றுமொறு பெருமை உண்டு - காதலர்களின் சரணாலயம். இங்கு வருவோர் எவரையும் எந்த சட்டையும் செய்யாமல் தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் பல இளங்ஜோடிகளை இங்கு காணலாம். இந்த முக்கிய ஸ்தலதிற்கு காதலர் தினத்தை முன்னிட்டு மதுரை மாநகராட்சி என்ன சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் அன்றைய தினம் காதலர்களுக்கு மட்டும்தான் அனுமதி என்று அறிவிக்கலாம். எப்பூடி? மாநகராட்சி அறிவிக்கிறதோ இல்லையோ அடுத்த ஒரு வாரத்திற்கு நான் அங்கு செல்வதாக இல்லை. இளம் ஜோடிகளை தொந்தரவு செய்யவேண்டாம் என்றுதான்.

Friday, December 23, 2011

யாருக்கு சனி பெயர்ச்சி?

திடீர் திருப்பங்களுக்கும் திகைப்பூட்டும் காட்சிகளுக்கும் பஞ்சமில்லாத தமிழக அரசியலில் யாருமே எதிர்பாராத திருப்பம்! சசிகலா மற்றும் அவரது அனைத்து உறவினர்களும் கட்சி மற்றும் போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றம்!!

பெங்களுரில் நடைபெறும் வழக்கில் தீர்ப்பு எதிராக வரும் பட்சத்தில், ஆட்சி மற்றும் கட்சியை சசிகலா குடும்பத்தினர் கைப்பற்ற திட்டமிட்டதாகவும், அதனால்தான் இந்த அதிரடி நடவடிக்கை என்று செய்திகள். இது கருப்பு-வெள்ளை திரைப்படங்களை ஞாபகப்படுத்துகிறது.

காரணங்கள் எதுவாக வேணுமானாலும் இருக்கட்டும், அது ஒரு பிரச்சனையே இல்லை.

ஆனால், ஜெயலலிதாவின் அனைத்து தவறுகளுக்கும் சசிகலா குடும்பம்தான் காரணம் என்பது போல் அவரின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர், அதனை அனைத்து பத்திரிக்கைகளும் ஆதரிக்கின்றனர். ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாதம். சசிகலாவின் வெளியேற்றத்தால் இனி தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறும் என்றும் கூக்குரல் இடுகின்றனர்.

ஆரம்பம் முதல் ஜெயலலிதாவை பாதுகாக்க எல்லா முயற்சிகளும் எடுத்து வரும் தமிழக வலதுசாரி லாபியினால் இப்படிப்பட்ட ஒரு பிரசாரம் காலம் காலமாக செய்யப்படுகிறது என்பது பரவலான கருத்து. அதில் உண்மையும் உள்ளது. ஆர்.எஸ்.எஸ் அனுதாபி துக்ளக் சோ இந்த லாபியின் முக்கிய உறுப்பினர். இதுவும் அனைவரும் அறிந்ததே.

ஜெயலலிதாவின் பல நடவடிக்கைகளும் இந்துத்வா கொள்கைகள் மீதான அவரின் அதீத பிடிப்பை ஊர்ஜீதம் செய்யும்.

ஆக, இந்த அரசியல் நாடகத்தை புரிந்துகொள்ள ஒரு சில உதாரணங்களை ஆராய்ந்தாலே போதுமானது.

எல்லோரும் குற்றம் சாட்டும் ஊழலை முதலில் எடுத்து கொள்வோம், இது கூட்டு கொள்ளை என்பது ஊரறிந்த உண்மை.

அரசின் கொள்கை முடிவுகளில் (Policy Decisions) சசிகலாவின் பங்கு என்ன? உதாரணமாக சென்ற ஆட்சியில் ஆடு-கோழி பலியிடுதல் தடைச்சட்டம், மதமாற்ற தடைச்சட்டம், எதிர்த்தவர் மீதெல்லாம் தடா, பொடா மற்றும் கஞ்சா வழக்கு, ஒரே இரவில் பல லட்சம் அரசு ஊழியர்கள் பதவி நீக்கம்.

இந்த முறையும் பதவிக்கு வந்து சில மாதங்களுக்குள் எவ்வளவு குளறுபடிகள். சமச்சீர் கல்வி தடை, தலைமை செயலக இட மாற்றம், அண்ணா நூலக இட மாற்றம், மக்கள் நல பணியாளர்கள் பதவி நீக்கம்.

இந்த செயல்களுக்கும் சசிகலா நட்பிற்கும் என்ன தொடர்பு?!?!

இதனை சற்று யோசித்தோம் என்றால் ஒன்று தெளிவாகும். சசிகலாவிடம் இருந்த அதிகார மையம் இப்போது இடம் பெயர்ந்துள்ளது! அவ்வளவே!!

தமிழ் பத்திரிக்கைகள் சசிகலாவின் வெளியேற்றத்தை சனிப்பெயர்ச்சியுடன் ஒப்பிட்டு செய்திகள் வெளியிடுகின்றன! யாருக்கு சனிப்பெயர்ச்சி? ஜெயலலிதாவிற்கா அல்லது அவரை ஆளுமை செய்ய இத்தனை காலம் காத்திருந்த மற்றொரு லாபிக்கா?
 

Sunday, December 18, 2011

ஆன்லைன் ஆண்டவர் அருள்பாலிக்கட்டும்

ஃபேஸ்புக், ட்வீட்டர் போன்ற வலைதளங்களை உபயோகிப்பதில் முன்னனி வகிக்கும் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா தன்னுடைய இரண்டு மகள்களும் இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகுதான் ஃபேஸ்புக்கில் இணைய வேண்டும் என்று கூறியுள்ளார். ’எங்களுக்கு தெரியாத பல லட்சம் பேர் எதற்கு எங்களின் தனிப்பட்ட விவகாரங்களை தெரிந்துகொள்ளவேண்டும். அது அர்த்தமற்றது’ என்கிறார். எனவே, குழந்தைகள் இன்னும் கொஞ்சம் பக்குவம் அடைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். சரி, பெரியவர்கள் நாம் எந்த அளவு பக்குவத்துடன் இவற்றினை பயன்படுத்துகிறோம்? டன் கணக்கில் நம் சொந்த புகைப்படங்களை அள்ளிவிடுகிறோம்! (மற்றவருக்கு அதனை பார்க்க நேரம் அல்லது பொறுமை இருக்கிறதா என்று நமக்கு கவலை இல்லை) ’தோசை சாப்பிடுகிறேன்’ ‘கை கழுவுகிறேன்’! இப்படியெல்லாம் செய்திகள்!! இவற்றிலெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், தனிப்பட்ட கருத்துக்களை சொல்லும்போது எந்த அளவு மற்றவர்களை நோகடிக்காமல் செயல்படுகிறோம்? இங்குதான் பெரும்பாலானோர் தவறுகிறோம். இறுதியில் முகம் தெரியாதவர்களுடன் மல்லுக்கு நிற்கிறோம்!! மொத்ததில், இந்த சமூக வலைதளங்களின் (Social Networking Sites) தீவிர ரசிகர்கள் இவற்றினை பக்குவத்துடனும் முதிர்ச்சியுடனும் பயன்படுத்த 'ஆன்லைன் ஆண்டவர்' அருள்பாலிக்கட்டும். அருள் எனக்கும் சேர்த்துதான்.


o0O0o


சமச்சீர் கல்வியில் தொடங்கி கடைசியாக அண்ணா நூலக இடமாற்றம் வரை தமிழக அரசின் அனைத்து முடிவுகளும் நீதிமன்ற தலையீட்டினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அல்லது மாற்றப்பட்டுள்ளது.  இதற்கு என்ன காரணம் என்று யோசிப்பதைவிட, தமிழக அரசு இப்படிப்பட்ட தர்மசங்கடங்களை தவிர்க்கலாமே என்றுதான் எண்ண தோன்றுகிறது. ஆனால், நம் முதல்வர் எதிலும் விளைவுகளை யோசிக்காமல் முடிவு எடுப்பதில் கெட்டிக்காரர்! முதல் நாள் ஒரு முடிவு அது அடுத்த நாள் கோர்ட் உத்தரவினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ மாற்றப்படுவது அவர் அரசின் நிரந்தர நிகழ்வு. இது துக்ளக் தர்பாரையும் மிஞ்சுகிறது. முதல்வரின் நெருங்கிய வட்டத்தில் உள்ள ஒருவர் முகமது-பின்-துக்ளக்கின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.


                                                                             o0O0o


இரண்டு தினங்களுக்கு முன் மதுரையில் வழக்கறிஞர்கள் முல்லைபெரியாறு விவகாரத்திற்காக ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக் முக்கிய சாலைகளில் ஊர்வலம் சென்றனர். அப்போது வழியில் வைக்கப்பட்டிருந்த கேரள நிறுவனம் ஒன்றின் விளம்பர பலகைகள் ஊர்வலத்தில் சென்றவர்களால் அடித்து நொறுக்கபட்டன. சேதப்படுத்தப்பட்டவை தமிழகத்தை சேர்ந்த ஒரு விளம்பர நிறுவனதிற்கு சொந்தமானவை. ஆக, நட்டம் அந்த விளம்பர நிறுவனதிற்கும் அனுமதி அளித்த மாநகராட்சிக்கும்தான். அந்த கேரள நிறுவனதிற்கு அல்ல. இப்படி சேம் சைடு கோல் அடிப்பவர்களை நம்பி எப்படி நாம் வழக்குகளை ஒப்படைப்பது? இவர்கள் உணர்ச்சிவயப்பட்டால் சொந்த கட்சிக்காரர்களுக்கே தண்டனை வாங்கி கொடுத்துவிடுவார்களே!!    
                                                                             
                                                                              o0O0o


’ஒய் திஸ் கொலவெறி’. இப்போது எங்கு பார்த்தாலும் பரபரப்பாக பேசப்படும் பாடல். நன்றாக உள்ளதா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி பாடல் பிரபலமாகிவிட்டது! பாடலின் வெற்றிக்கு அதனை வெளியிட்ட சோனி நிறுவனத்தின் வியாபார திறனும் ஒரு காரணமாக இருக்கலாம். காரணங்கள் ஒருபுறம் இருக்க, சிலர் இதனை விமர்சிக்கையில் அந்த கால எம்.எஸ்.வி, இளையராஜாவுடன் ஒப்பிடுகிறார்கள். தேவையற்ற ஒப்பீடு. அந்தந்த காலகட்டதிற்க்கு ஏற்ப பாடல்கள் வருகிறது, அவ்வளவே. இதெல்லாம் இருக்கட்டும் எல்லோரும் எம்.எஸ்.வி, இளையராஜா போல் ஆகிவிட்டால் அப்புறம் அவர்களுக்கென்று தனித்துவம் வேண்டாமா?    

Monday, November 7, 2011

நீரிழிவும் இருதய நோயும்

பிரபல இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எம்.செரியன் அவருடைய வலைத்தளத்தில் நீரிழிவும் இருதய நோயும் - ஆபத்துக்கள் மற்றும் சிகிச்சை முறைகள் (Diabetes and Heart Disease - Risks and Treatment Options) என்ற தலைப்பில் மிக அருமையான பதிவு ஒன்றினை தந்துள்ளார்.

இந்த பதிவில், நீரிழிவு அதாவது சர்க்கரை நோய் (Diabetes) உள்ளவர்களுக்கு இருதயம் பாதிக்கபடுவதற்கான வாய்ப்புகளும் அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் மிகவும் எளிமையாக பதிந்துள்ளார்.

அந்த பதிவின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. (இது அவரின் ஒப்புதலுடன் செய்யப்பட்டுள்ளது)


*****


நீரிழிவும் இருதய நோயும் - ஆபத்துக்கள் மற்றும் சிகிச்சை முறைகள்

நீரிழிவு நோயினால் பாதிக்கபட்டவருக்கு மாரடைப்பு (Heart Attack) வருவதற்கான அபாயம் அந்நோய் இல்லாதவரைவிட இரண்டு மடங்கு அதிகம்.

நீரிழிவு இல்லாதவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் (Stroke) வரும் வயதினைவிட நீரிழிவு உள்ளவருக்கு குறைந்த வயதில் அந்நோய்கள் வருவதற்கான அபாயம் உள்ளது.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு, ஒரு முறை மாரடைப்பு வந்திருந்தால், மேலும் அது இரண்டாம் முறை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நீரிழிவு நோயானது நாடி-உட்படிவுகளை (Atherosclerosis) ஏற்படுத்தும். எப்படி?

அதிகப்படியான இரத்த பழச்சர்க்கரை (Blood Glucose) -> இரத்த குழாயில் கொழுப்பு (Cholesterol) அதிகமாக சேர்வதற்கான அபாயம் -> இரத்த ஓட்டத்திற்கு பாதிப்பு -> நாடி-உட்படிவுகள்

இதனை தவிர்ப்பது அல்லது காலதாமதம் செய்வது எப்படி?

1. ஆரோக்கியமான இருதயத்திற்கு தேவையான உணவுமுறையினை கடைப்பிடிப்பது என்பதுதான் முதன்மையானது மற்றும் மிக முக்கியமானதும்கூட.

  • நார் (Fiber) சத்து நிறைந்த உணவு
  • இரத்த கொழுப்பினை (Cholesterol) குறைத்தல்
  • பூரிதக் கொழுப்பினை (Saturated Fat) குறைத்தல்
  • ட்ராண்ஸ் ஃபட் (Trans Fat) குறைத்தல்
  • புரத சத்து (Protein) நிறைந்த உணவு

2. சரியான உடற்பயிற்சி மூலம் உடல் நலத் தகுதியினை (Physical Fitness) பேணுதல்.

3. மன அழுத்தத்தை நீக்குதல் (De-stress).

4. புகை பிடித்தல் கண்டிப்பாக கூடாது.

5. சரியான மருத்துவத்திற்கு இருதய சிகிச்சை நிபுணரின் ஆலோசனையை பெறுதல்.

6. A1C பரிசோதனை அடிக்கடி செய்துகொள்ளுதல். (கொழுப்பு மற்றும் இரத்த பழச்சர்க்கரை கட்டுக்குள் இருப்பதை ஊர்ஜிதப்படுத்திகொள்ள).

மேலும், இது சம்மந்தமாக எடுத்துகொண்டிருக்கும் சிகிச்சைகள் முறையாக உள்ளன என்பதனை ஊர்ஜிதப்படுத்திகொள்ளவும் தவறாமல் இப்பரிசோதனையை செய்துகொள்வது அவசியம்.


http://frontierlifeline.wordpress.com/